“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Sunday, January 22, 2012

டாக்டர் கே. பாலகோபால் “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”


டாக்டர் கே. பாலகோபால்
“வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”
தொகுப்பும் மொழியாக்கமும்: அ. மார்க்ஸ்

மனித உரிமைத் தளத்தில் ஆழமான தடம் பதித்த பாலகோபால்
வன்முறை பற்றி கொண்டிருந்த கருத்து முழுமையாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது.
வன்முறையற்ற அவரது கருத்தும் செயல்பாடுகளும் மனித உரிமை ஆர்வலர்கள்
கவனத்தில் கொள்ள வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையற்ற
வழிமுறைகளையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுவதோடு, வன்முறை குறித்த
ஆழமான பார்வை முன்வைக்கிறார் பாலகோபால். தற்போது அவரின் வன்முறை
பற்றிய கருத்து இந்திய அளவில் மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

விலை: ரூ.18 பக்கங்கள்: 48

திபெத்திய மரண நூல் - பத்மசம்பவர்


திபெத்திய மரண நூல்
பத்மசம்பவர்
தமிழாக்கம்: ஓ.ரா.ந. கிருஷ்ணன்

திபெத்திய மரண நூல் (Tibetan Book Of The Dead) என்று உலக அளவில் புகழ்பெற்றுள்ள இந்த நூல் மரணத்திலும், மரணத்திற்குப் பின்பும் மறுபிறவி கொள்வதற்கு முன்பும் உள்ள இடைநிலையிலும், மறுபிறவி கொள்ளும் நிலையிலும் நிகழ்பவற்றை தியானத்தில் பெற்ற ஞானக் காட்சிகளின் மூலம் தெளிவாகக் கண்டுணர்ந்து விரிவாக விளக்கிக்கூறும் ஒப்பற்ற பௌத்த சமய நூலாகும்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து திபெத்திற்குப் பௌத்த சமயப் போதகராகச் சென்று அங்கு பௌத்த தம்மத்தை வேரூன்றி வளரச் செய்த பத்மசம்பவர் எனும் ஞானயோகியால் இயற்றப்பட்டதாகும் இந்த அரிய நூல்.
நல்ல வாழ்க்கை இல்லையெனில் நல்ல மரணம் இல்லை. நல்ல மரணம் விமோச்சனத்திற்கு அல்லது நல்ல மறுமைக்குக் காரணமாகின்றது. எவ்வாறு நல்ல வாழ்க்கை வாழ்வது, நல்ல மரணம் எய்துவது, நல்ல மறுமை பெறுவது என்று விளக்கிக் கூறும் இந்த நூல் உலக இலக்கியங்களில் தலைசிறந்த ஒரு நூலாகப் போற்றிப் பாராட்டப்படுகின்றது. இந்த அரிய நூல் இப்போது முதன்முறையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழ்த்தாயின் பொன்னடிகளில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

வெளியீடு: மெத்தா
விலை ரூ. 280