“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Monday, January 31, 2022

புலம் புதிய வெளியீடுகள்


 மாயக்கண்ணி (சிறுகதைகள்) - ஆதிரன்

விலை ரூ.150

அகமும் புறமுமாக இடையறாது தொடரும் மனத்தின் உரையாடல்களை யதார்த்தத் தளத்திலும் மிகு புனைவு வெளியிலும் நமக்குள்  ஊடாடச் செய்கின்ற ஆதிரனின் கதைகளில், மையப் பாத்திரங்கள் செயல்படும் அகவெளியைத் தீர்மானிப்பவர்களாகப் பெண்கள் இருக்கின்றார்கள். 

ஒழுங்கிற்கும் ஒழுங்கற்றவைக்குமான முரண்களில் சஞ்சரிக்கும் மானுட இயல்பு இவையிரண்டுமற்ற வெளியொன்றில் பயணிக்க எத்தனிக்கையில் நேர்கிற ஊடாட்டம் வாழ்வின் நெடும்பயணத்திற்குமானது. இந்தக் கதைகள் கனவுலகிற்கும் யதார்த்தத்திற்குமான இயல்புக்கும் இயல்பற்றதற்குமான இடைவெளியில் வாய்க்கின்ற வாழ்வியக்கத்தைச் பேசுகின்றன.

No comments:

Post a Comment