
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்
Sunday, January 22, 2012
டாக்டர் கே. பாலகோபால் “வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”

திபெத்திய மரண நூல் - பத்மசம்பவர்

காஷ்மீர் என்ன நடக்குது அங்கே?

அ. மார்க்ஸ் சில மதிப்பீடுகள்

ஆதார அடையாள அட்டை என்னும் ஆபத்து

ஆதார அடையாள அட்டை என்னும் ஆபத்து
அ. மார்க்ஸ்
வெளியீடு: இந்திய சமூகச் செயல்பாட்டுப் பேரவை
விழிப்படல், கைரேகைகள் முதலிய அங்க அடையாளப்
பதிவுகளுடன் கூடிய
"ஆதார அடையாள அட்டை” (unique identity card)
ஒன்றை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு
நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது.
சமூக நலத் திட்டங்கள் இத்தகைய ஆதார அட்டையின் அடிப்படையிலேயே
செயல்படுத்தப்படும் என
ஆளுநர் உரையில் அறிவுறுத்தியிருக்கிறது ஜெயலலிதா அரசு.
இது மக்களின் அனைத்து அந்தரங்கங்களையும்
அரசு தனது கண்காணிப்பிற்குள் கொண்டு வரும்
முயற்சிமட்டுமல்ல, படிப்படியாகச் சமூக நலத்திட்டங்களின்
விற்பனை உரிமை: புலம்
விலை ரூ.10
இழப்பதற்கு ஏதுமில்லை

இழப்பதற்கு ஏதுமில்லை
அ. மார்க்ஸ்
“ஒவ்வொருமுறை அ. மார்க்ஸின்
பேனா குனியும்போதும் ஒரு தலித் அல்லது முஸ்லிமின் தலை நிமிர்கிறது”
சுமார் இருபதாண்டு காலமாக அவர்
எழுதி வருபவற்றில் சிறுபான்மையோர் தொடர்பான தேர்வு செய்யப்பட்ட
பதிமூன்று கட்டுரைகளின் தொகுப்பு இது. மேற்குலகும் பாசிச சக்திகளும் முன்வைப்பதுபோல முஸ்லிம்களைக் கலாச்சாரத்தின் கைதிகளாகப் பார்க்க இயலாது, மாறாகக் கலாச்சாரச் சொல்லாடல்களையே சமகால அரசியலில் வைத்து விளங்கிக் கொள்ள வேண்டும் என முன்னுரையில்
சொல்வதற்கிணங்க முஸ்லிம்களுக்கு எதிரான சொல்லாடல்கள் இக்கட்டுரைகளில் கட்டுடைக்கப்படுகின்றன.
சிறுபான்மையோர் பிரச்சினைகள் தொடர்பான ஒரு அடக்கமான கையேடாக இன்று இது உங்கள் கைகளில் தவழ்கிறது
விற்பனை உரிமை: புலம்
விலை ரூ. 135
பாபர் மசூதி x இராம ஜென்ம பூமி அயோத்தியில் ஒரு நேரடி கள ஆய்வு (சமாதானத்தின் சாத்தியங்களும் சாத்தியமின்மைகளும்)

சேகுவேராவின் கடிதங்கள்

சேகுவேராவின் கடிதங்கள்
தமிழாக்கம்: உமர்
எனக்கும்
உங்களுக்கும்
இடையில் நெருங்கிய
உறவுண்டு என்று
நான் நினைக்கவில்லை.
உலகில் நடக்கிற
அநீதியைக் கண்டு
நீங்கள் கோபம்
கொள்வீர்கள் என்றால்
நாம் தோழர்கள் தான்.
அது தான் முக்கியம்.
எனது குழந்தைகளுக்கு,
சரியானது என்று தோன்றுவதைச் செய்யவும், தனது தத்துவத்தில் ஒருபோதும் பின் வாங்காமல்
வாழவும் செய்த ஒருவராக இருந்தார் உங்கள் தந்தை. நீங்கள் நல்ல புரட்சியாளர்களாக வளர வேண்டும்
என்பது தான் இந்த தந்தையின் விருப்பம். மனதில் பதிகிற மாதிரி படிக்கவும் இயற்கையை நமது சொற்படி நிறுத்துகிற தொழில்நுட்ப வித்தையில் நிபுணத்துவம் பெறவும் வேண்டும். முழு முக்கியமானது புரட்சிதான் என்றும் தனியாகக் கையில் எடுத்தால் நம் எல்லோருக்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லையென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதைவிட முக்கியமானது அநீதியை எங்கு பார்த்தாலும் எதிர்க்க முடிய வேண்டும் என்பது தான்.
ஒரு புரட்சியாளனின் மிகவும் வணக்கத்திற்குரிய குணம் அதுதான்.
குழந்தைகளே, இந்த தந்தையைப் போக அனுமதியுங்கள். என்றாவது ஒருநாள் நாம் பார்க்க முடியுமென்று விரும்பலாம்.
என் பொன் முத்தங்களையும் தழுவல்களையும் இத்துடன் அனுப்புகிறேன்.
உங்கள் தந்தை
சே
விலை ரூ. 40
ஜஸ்டின் (நாவல்) மார்க்விஸ் தே சாட்

ஜஸ்டின் (நாவல்)
மார்க்விஸ் தே சாட்
தமிழாக்கம்: உமர்
எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகச் சொல்கிற ஒரு துயரம் நிறைந்த கதைதான் இது.
நாம் எதிர்கொள்ள வேண்டி வருகிற கஷ்டங்களை நினைத்து நீங்கள் கண்ணீர் வடித்தால்
நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நல்லவளான பாவம் ஜஸ்டினின் பயங்கரமான துயரக் கதையை
வார்த்தைகளின் மூலம் வரைந்து காட்ட நாங்கள் கட்டாயம் ஆனவர்களானோம்.
அவள் எங்களிடம் சகிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். படிக்கும்போது மேடம் லோர்கினைப் போல உங்களுக்கும் அதன் பயன் கிடைக்கும். அவரைப் போலவே உங்களுக்கும் ஒரு விஷயம் புரியும். யதார்த்த மகிழ்வின் இடம் நன்மையே ஆகும். பூமியில் நன்மை தண்டிக்கப் பட்டால் கடவுள் அனுமதித்தால் கூட அவனது லட்சியத்தை நாம் கேள்வி கேட்கக் கூடாது. நன்மைக்கான பிரதிபலன் ஒருவேளை அடுத்த ஜென்மத்திலாக இருக்கலாம். புனித பைபிளில் சொல்வதைக் கேளுங்கள்.
“தர்மத்தை கடைப்பிடிப்பவனை மட்டுமே கர்த்தர் பரிசுத்த ஆத்மாவாக அறிவிக்கிறார்.”
சரிதான். நன்மையின் பிரதிபலன் நன்மை என்று நினையுங்கள்.
தமிழகப் பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்

தமிழகப் பழங்குடி வழக்காற்றியல்
கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்
பேரா. நல்லதம்பி
பன்முகத் தன்மை கொண்ட தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை உருவாக்குவதற்கான அடிப்படைத் தரவுகள் பலவற்றையும் கொண்டுள்ள இந்நூல், கல்வராயன் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, மனித இனத்தின் மறுஉற்பத்திச் செயல்பாட்டுக்குரிய சடங்குமுறை, கூத்து முதலான கலைவடிவங்களின் இயல்பையும் அவற்றின் தனித்துவத்தையும் நம்பகத் தன்மையோடு பதிவு செய்துள்ளது.
மொழியியல், மானுடவியல், பண்பாட்டு வழக்காற்றியல் நோக்கில் தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த ஆய்வு நூல்கள் குறைவாகவே வந்துள்ள தமிழ்ச் சூழலில், இந்நூல் கல்வராயன் மலைவாழ் பழங்குடிகள் பற்றிய அறிமுகத்தைப் பரவலாக்குவதற்கும், அவர்கள் குறித்த மேலாய்வு செய்வதற்கும் துணை நிற்கும்.
விலை ரூ.140
குருதியில் மலர்ந்த மகளிர் தினம் கிளாராவின் நினைவில்

குருதியில் மலர்ந்த
மகளிர் தினம்
கிளாராவின் நினைவில்
கிளாரா...
உனது பெயர் விடுதலைக்குப் போராடுகின்ற பெண்களுக்குப் புதிய உத்வேகத்தைத் தரும். உனது பெயர் திரிபுவாதிகளின் நெஞ்சை வெடித்துச் சிதறச் செய்யும். சுரண்டப்பட்ட மக்களின் விடுதலையில்தான் பெண் விடுதலை அடங்கியிருக்கிறது என்று சொன்னாய்!
சக தோழர்களிடமுள்ள தந்தைவழி சிந்தனையை எப்படிப் போக்க வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டினாய்...
கிளாரா...
எங்களின் வழிகாட்டியே!
‘‘பரந்துபட்ட பாட்டாளி வர்க்க மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஆண் தொழிலாளர்மீது வைத்த அக்கறையை பெண் தொழிலாளர் மீது வைக்கவில்லை என்றால் அது பாட்டாளி வர்க்க இயக்கம் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பாகும்.’’
இந்த உனது வார்த்தைகள் எங்களது காதுகளில் ரீங்காரமிடும் போதெல்லாம் உனது உன்னதமான புரட்சிகர வாழ்வின்
வெளிச்சத்தையே எங்கள் இலட்சியத்தின் திசையாகக் கொண்டு அப்பாதையில் உறுதியாகத் தெளிவாகப் பயணிப்போம்.
உனது இலட்சியக் கனவுகளை நிறைவேற்றுவோம்.
விலை ரூ.60
ஆஷ் படுகொலை மீளும் தலித் விசாரணை அன்புசெல்வம்

ஆஷ் படுகொலை
மீளும் தலித் விசாரணை
அன்புசெல்வம்
சாதிகளின் தோற்றம்
வளர்ச்சி, தக்க வைக்கும்
பிழைப்புவாத இயங்கியல்
இவற்றை கோட்பாட்டு ரீதியாக,
கல்வி - அறிவுத் தளத்தில் நன்றாக
அறிந்து வைத்திருக்கின்ற, சமுக மாற்றம் பேசும் படித்த அறிவு ஜீவிகளின் சாதி உணர்வு இருக்கிறதே. அதையும் கண்டறிந்து, அவர்களிடம் பேசும் சாதி ஒழிப்பு அரசியல் சமுக மாற்றத்துக்கான காரணியாக அமைவதில்லை. அது அவர்களின்
உள் மனதில் நுட்பமாகப் பதுங்கிக் கிடப்பதை
ஆஷ் படுகொலை வரலாற்றில் கண்டுணர முடிந்தது. இப்படுகொலையில் நேரடியாக, மறைமுகமாக,
சராசரி பார்ப்பனர்களும், எடைக்கு எடை வேளாளர்களும் செய்த இத்தகைய
அறிவு ஜீவித்தன அசிங்கத்தை
எங்கே போய் சொல்ல!
விலை ரூ.60
Tuesday, June 22, 2010
தற்கொலைகளைக் கொண்டாடுவோம்
விலை: ரூ.130 பக்கங்கள்: 242

வரலாறு, சமயம், சாதி, உடல், பால் எனப் பல தளங்களில் கட்டப்பட்டிருக்கும் பண்பாட்டுக்குப் புனிதங்களைக் கட்டுடைக்கும் பிரதிகள்மீது ராமாநுஜம் கொண்டிருக்கும் புரிதல், அவரது மொழி நகர்த்திச் செல்லும் தளம், சமூக இருப்பில் நாம் பேணுவதாக நம்பிக்கொண்டிருக்கும் தூய்மைவாதக் கற்பனைகளைப் புறந்தள்ளி, மையங்களை விலக்கி அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் பார்வையை நம்மிடம் விட்டுச் செல்கின்றது.
Tuesday, April 27, 2010
Saturday, August 22, 2009


பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?” நூல் வெளிவந்துவிட்டது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் வெளிவந்துள்ள இந்நூல் மொத்தம் 200 பக்கங்கள். விலை ரூ. 100.
அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழுவில் காஷ்மீர் சென்று அங்குள்ள நிலைமைகளை கண்டறிந்து அவற்றை தொகுத்து அளித்துள்ளார் அ.மார்க்ஸ்.
‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால் என இந்திய அரசியல்வாதிகள் முன்வைக்கின்றனர். இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் வேர் காஷ்மீர் பிரச்சினையில் பதிந்துள்ளதை நாம் அறிவோம்.
‘காஷ்மீர் பிரச்சினை’ என்பது உண்மையில் “காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு ஜம்மு காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை” என்பதன் சுருக்கமே.
காஷ்மீர் பிரச்சினையின் வரலாற்றை, அங்கு தீவிரவாதம் உருப்பெற்றதில் இந்திய அரசின் பங்கை, தன் நேரடிக் கள அனுபவங்களுடன் இணைத்து ஒரு புனைவுக்குரிய விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறார் அ.மார்க்ஸ்.
2009 தேர்தல் வரை காஷ்மீர் வரலாற்றை சொல்லும் நூலாசிரியர் புதிய சூழலில் மேலெழும் பல புதிய கேள்விகளை வழக்கம் போல் முன்வைக்கிறார். இக்கேள்விகள் காஷ்மீருக்கு மட்டுமல்ல தென் ஆசியாவில் நடைபெற்று வரும் இதர விடுதலைப் போராட்டங்களுக்கும் பொறுத்தமானவையே.
திருவல்லிக்கேணி,
சென்னை 600 005
கைபேசி: 097898 64555.

விலை ரூ.30 பக்கங்கள் 56