“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Sunday, January 22, 2012

காஷ்மீர் என்ன நடக்குது அங்கே?


காஷ்மீர் என்ன நடக்குது அங்கே?
அ.மார்க்ஸ்
விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு


‘எல்லைதாண்டிய பயங்கரவாதம்’தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால் என இந்திய அரசியல்வாதிகள் முன்வைக்கின்றனர்.
இந்த எல்லைதாண்டிய பயங்கரவாதத்தின் வேர் காஷ்மீர்ப் பிரச்சினையில் பதிந்துள்ளதை நாம் அறிவோம்.
‘காஷ்மீர்ப் பிரச்சினை’ என்பது உண்மையில் ‘காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு ஜம்மு காஷ்மீரைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை’ என்பதன் சுருக்கமே.
காஷ்மீர்ப் பிரச்சினையின் வரலாற்றை, அங்கு தீவிரவாதம் உருப்பெற்றதில் இந்திய அரசின் பங்கை, இன்றைய நிலையை, தன் நேரடிக் கள அனுபவங்களுடன் இணைத்து ஒரு புனைவுக்குரிய விறுவிறுப்புடன் சொல்லிச்
செல்கிறார் அ. மார்க்ஸ்.
2009 தேர்தல் வரை காஷ்மீர் வரலாற்றைச் சொல்லும் நூலாசிரியர், புதிய சூழல்களில் மேலெழும் பல புதிய கேள்விகளை வழக்கம் போல உங்கள்முன் வைக்கிறார். இக்கேள்விகள் காஷ்மீருக்கு மட்டுமல்ல, தென் ஆசியாவில் நடைபெற்றுவரும் இதர விடுதலைப்
போராட்டங்களுக்கும் பொருத்தமானவையே.

விலை ரூ. 130

No comments:

Post a Comment