“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Sunday, January 22, 2012

சேகுவேராவின் கடிதங்கள்


சேகுவேராவின் கடிதங்கள்

தமிழாக்கம்: உமர்


எனக்கும்
உங்களுக்கும்
இடையில் நெருங்கிய
உறவுண்டு என்று
நான் நினைக்கவில்லை.
உலகில் நடக்கிற
அநீதியைக் கண்டு
நீங்கள் கோபம்
கொள்வீர்கள் என்றால்
நாம் தோழர்கள் தான்.
அது தான் முக்கியம்.

எனது குழந்தைகளுக்கு,
சரியானது என்று தோன்றுவதைச் செய்யவும், தனது தத்துவத்தில் ஒருபோதும் பின் வாங்காமல்
வாழவும் செய்த ஒருவராக இருந்தார் உங்கள் தந்தை. நீங்கள் நல்ல புரட்சியாளர்களாக வளர வேண்டும்
என்பது தான் இந்த தந்தையின் விருப்பம். மனதில் பதிகிற மாதிரி படிக்கவும் இயற்கையை நமது சொற்படி நிறுத்துகிற தொழில்நுட்ப வித்தையில் நிபுணத்துவம் பெறவும் வேண்டும். முழு முக்கியமானது புரட்சிதான் என்றும் தனியாகக் கையில் எடுத்தால் நம் எல்லோருக்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லையென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதைவிட முக்கியமானது அநீதியை எங்கு பார்த்தாலும் எதிர்க்க முடிய வேண்டும் என்பது தான்.
ஒரு புரட்சியாளனின் மிகவும் வணக்கத்திற்குரிய குணம் அதுதான்.
குழந்தைகளே, இந்த தந்தையைப் போக அனுமதியுங்கள். என்றாவது ஒருநாள் நாம் பார்க்க முடியுமென்று விரும்பலாம்.
என் பொன் முத்தங்களையும் தழுவல்களையும் இத்துடன் அனுப்புகிறேன்.
உங்கள் தந்தை
சே

விலை ரூ. 40

No comments:

Post a Comment