“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Monday, April 6, 2020

புலம் புதிய வெளியீடு


லெனினின் வாழ்க்கைக் கதை
(நவீனம்)
மரீயா பிரிலெழாயெவா
தமிழில்: பூ.சோமசுந்தரம்
விலை ரூ. 280

மானுட சமூகத்தின் ஒட்டுமொத்த மீட்சிக்கான பாதையாக தன்னலமற்ற நெடிய போராட்டங்கள், அளப்பரிய தியாகங்கள், தீரம் மிக்க மாபெரும் கிளர்ச்சிகளின் மூலமாகத் தம் தேசத்தின் வாழ்முறைச் சித்தாந்தமாகப் புத்தொளியான பொதுவுடைமைச் சித்தாந்தத்தைச் செயலாக்கம் பெறச் செய்த தோழர் லெனின் வாழ்வின் மகத்தான தருணங்களை இந்நூல் விவரிக்கின்றது; உழைக்கும் மக்களை, எளியவர்களை இரக்கமற்ற முடியாட்சியின் பிடியிலிருந்து விடுவித்து, சமதர்மம் கொண்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக்குவதற்காக ஓயாது சிந்தித்த மனம், இடையறாது எழுதிய கரங்கள், வெண்பனி தூவும் பொழுதுகளில் களைப்பறியாது நடந்த பாதங்கள், விரிந்துகிடக்கும் உறைபனிப் பாறைகள் கொண்ட நிலத்தில் வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கை, மாறுவேடங்கள், தண்டனைக் காலங்கள் எனத் தோழர் லெனின் கொண்ட இலட்சிய வேட்கை மிகு வாழ்வின் சாரத்தைக் காட்சிகளாக்கித் தந்திருக்கிறது. ஒப்பற்ற துணிவும், கட்டுப்பாடும் மிக்க ஒரு போராட்டக்காரரின் சாகசமிக்க வாழ்க்கைக் கதையை, அவர் கண்ட மானுடத்தின் மதிப்புமிகு கூறுகளை இப்புத்தகம் மிக அழகிய மொழியில் எடுத்துரைக்கின்றது.

No comments:

Post a Comment