“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Tuesday, April 7, 2020

புலம் புதிய வெளியீடு

அயோத்திதாசரும் சிங்காரவேலரும் (நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம்)
வெளிவராத விவாதங்கள்
தொகுப்பும் பதிப்பும்: ஸ்டாலின் ராஜாங்கம்
விலை ரூ.110

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ்ப் பகுதியில் உருவான பௌத்த மறுமலர்ச்சி குறித்தும், அவற்றில் செயல்பட்டவர்களிடையே இருந்து வந்த கருத்து நிலைகள், அவை சார்ந்த விவாதங்கள் குறித்தும் அறியத்தக்க கருத்துகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பௌத்தம் தொடர்பான விவாதங்கள் மட்டுமல்லாது, அக்காலச் சூழலில் உருவான பௌத்த சங்கங்களின் நிர்வாகம் தொடர்பான செய்திகளும் இத்தொகுப்பில் உள்ளன. இவை சாக்கைய பௌத்த சங்கத்தின் சார்பாக அயோத்திதாசரும் (1845-1914) மகாபோதி சங்கத்தின் சார்பாக ம.சிங்காரவேலரும் (1860 - 1946) நடத்திக்கொண்ட விவாதங்களாகும். இவ்விவாதங்கள் அயோத்திதாசர் நடத்திய தமிழன் (1907-1914) ஏட்டிலிருந்து தொகுக்கப்பட்டு முதன்முறையாக நூலுருப்பெறுகின்றன.

No comments:

Post a Comment