“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Friday, January 28, 2022

புலம் புதிய வெளியீடுகள்


 ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழிபெயர்ப்பும்) - 

தி.குலசேகர்

விலை ரூ.130


ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில்,  அறியாமையில், கற்பிதத்தில் வார்த்தெடுக்கப்பட்ட மரபணுக்களின் நீட்சியாக உருவாகிறார்கள்.  அறியாமைகளை நீக்கி வைத்துவிட்டுப் பார்க்கத் தெரிகிற மனங்களுக்கு அத்தனை பேரும் ஒன்றுதான். அவர்கள் எதிரில் இருக்கிறவர்களின் அறியாமைகளை உணர்ந்தவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமைகளை அகற்றிவிட்டு தரிசிக்கிற சக்தி கொண்டவர்கள். அதனால் அவர்களால் பேதம் பார்க்க முடிவதில்லை. பேதமற்ற பார்வையோடு, அனைவரையும் தன்னோடு ஒருங்கிணைத்துக்கொள்ள முடிகிறது. அவர்களிடம் தனிமை, தான் என்னும் சொற்கள் பொருளிழக்கின்றன. அவர்களின் அகராதியில் ஒருங்கிணைந்த, ஓர்மை கொண்டிருக்கிற, பிரபஞ்சப் பேரன்பு ஆகிய பதங்களின் அர்த்தங்களே நிரம்பித் ததும்புகின்றன.


No comments:

Post a Comment