“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Friday, January 28, 2022

புலம் புதிய வெளியீடுகள்

கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை - வறீதையா கான்ஸ்தந்தின் விலை ரூ.150

அடித்தள மக்களின் அரசியலாக்கமும் பொருளாதார விடுதலையும்...

இன்றைக்கு அதிகார அமைப்பு எப்படி இயங்குகிறது? கொஞ்சம் பேரைப் பெரும்பணக்காரர்களாய் ஆக்குவது; மற்றவர்கள் எல்லோரையும் பிச்சைக்காரர்களாக்குவது. அந்த பெரும் பணக்காரகளின் அடிமைகளாக்குவது. உலகம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை ஆகியிருக்கிறது. (இதற்கு மாற்றாக) அடித்தள மக்கள் குழுவாக்கத்தின் அடிப்படையில் மதங்களைத் தாண்டிய அரசியல் அமைப்பு முறையை உலக சமூகத்திற்கு முன்மொழிகிறோம்.

பணம் அதிகார முக்கியத்துவம் கொண்டது. மக்களுக்கான சந்தைப் பொருளாதாரம் (கீழிருந்து சந்தைப்படுத்துதல்) பெரும்பாலான சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு தரும். பெருவணிக முதலாளிகளின் கையில் குவிகிற இலாபம் மக்கள் கையில் வரத் தொடங்கினால் கணக்கில்லாத நிதி சேரும். அடித்தளக் குழுக்களின் நுகர்வுத் தேவைகளை உள்சுழற்சிப் பொருளாதார முறையில் மக்களே கையாண்டால் இலாபமாகத் தேறும் பெருநிதியை மக்களின் வளச்சிக்குத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம், மற்றவர்களுக்கும் நிதிக்கொடை வழங்கலாம். நிதியும் வணிகமும் உள்ளே வந்தால் எல்லோரும் உள்ளே வந்துவிடுவார்கள்.

அருட்பணி.எம்.ஜெ.எட்வின்

ஓவியம்: இளஞ்செழியன்


No comments:

Post a Comment